Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அலெக்சாண்டரும் வருகிறார்!
அக்பரின் கதையை பின்னணியாகக் கொண்டு வெளியாகியுள்ள ஜோதா அக்பர் பெரும் வெற்றி பெற்று உலகெங்கும் ஓடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாவீரன் அலெக்சாண்டரும் படமாகியுள்ளார்.
இப்படத்தையும் பாலிவுட்தான் தயாரித்துள்ளது. விக்ரம் குமார், திரிப்தா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'ராயல் உத்சவ்' என பெயரிட்டுள்ளனர். ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
ரவி கே.பட்வா இயக்கியுள்ளார். ஜோதா அக்பரைப் போலவே இப்படமும் பிரமாண்டமாக இருக்கும் என இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கி.மு. 400வது ஆண்டின் பின்னணியில் கதை நடப்பது போல காட்டியுள்ளார் பட்வா.
பல்வேறு நாடுகளையும் கைப்பற்றிய கையோடு இந்தியாவுக்கு வருகிறார் அலெக்சாண்டர். ஆனால் மற்ற நாடுகளைப் போல இந்தியாவுக்குள் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை அந்த மாவீரனின் படைகளால்.
இருப்பினும் பஞ்சாபில் நிலவிய கடும் எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி ஒரு வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது அலெக்சாண்டரின் படைகள்.
ஆனால் அதற்கு மேல் முன்னேற முடியாமல் திரும்பிச் செல்கிறார் அலெக்சாண்டர். நாடு திரும்பும் வழியில் மரணமடைகிறார் அலெக்சாண்டர். அதன் பிறகு அலெக்சாண்டர் மறு பிறவி எடுப்பதாகவும், இந்தியாவுக்குத் திரும்பி ராணி ரூப்மதியை மணப்பதாகவும் காட்டியுள்ளாராம் இயக்குநர் பட்வா.
100 மில்லியன் ரூபாய் செலவில் ராயல் உத்சவ் உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் படத்தை வெளியிடுகின்றனர். இந்தியில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் இப்படம் வெளியாகிறதாம்.