Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாங்காக்கில் 'இடி' ஆலோசனை!
கமர்ஷியல் படங்களில் கில்லாடி என்ற பெயரைப் பெற்றவர் ஷக்தி சிதம்பரம். ரசிகர்களுக்கு எது தேவையோ அதை திகட்டாமல், தருபவதில் பலே இயக்குநர்.
காமெடிப் படங்களுக்குப் பெயர் போன ஷக்தி சிதம்பரம் முதல் முறையாக இயக்கிய அதிரடிப் படம் சண்டை. ஹிட் ஆகி விட்ட இந்தப் படத்தால் இனிமேல் ஆக்ஷன் படங்களை மட்டுமே எடுக்கப் போவதாக கூறி வருகிறார் ஷக்தி.
தற்போது சுந்தர்.சியை வைத்தே அடுத்த படத்தையும் இயக்குகிறார். இதில் நமீதாதான் நாயகி. ஷக்தியின் படங்களில் தவறாமல் இடம் பெறும் நமீதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். படம் முழுக்க கிளாமரில் கலகலக்க வைப்பாராம்.
இடி படத்தில் என்னென்ன விஷயங்களை இடம் பெறச் செய்வது, கதையை எப்படி ஷேப் செய்வது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக சுந்தர்.சியும், ஷக்தி சிதம்பரமும் பாங்காக் பயணமாகியுள்ளனாரம்.
அங்கு வைத்து இடி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி கதையை இறுதி செய்த பின்னர் சென்னை திரும்பவுள்ளனராம்.
தற்போது சுந்தர்.சி கை நிறையப் படங்கள் இருக்கின்றன. பெருமாள், தீ, ஐந்தாம்படை, ஆயுதம் செய்வோம் என வரிசை காட்டி காத்திருக்கின்றன. இதையெல்லாம் முடித்து விட்டு 'இடி'க்க வருகிறாராம் சுந்தர்.சி.