Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கணவரின் முதல் மனைவி மூலம் ... 2வது கல்யாணம் செய்த நடிகை ஸ்ருதிக்கு சிக்கல்
பெங்களூர் கன்னட நடிகையான கல்கி ஸ்ருதிக்கு 2வது கல்யாணம் மூலம் சிக்கல் வந்துள்ளது. அவரது கணவரின் முதல் மனைவி பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். இதனால் ஸ்ருதி அப்செட்டாகியுள்ளார்.
கன்னட நடிகை ஸ்ருதி தமிழில் கல்கி மூலம் அறிமுகமானார். தற்போது கார்த்திகைப் பெண்கள் டிவி சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஸ்ருதி 2வது திருமணம் செய்தார். இவரது முதல் கணவர் பெயர் மகேந்தர். கன்னட நடிகரும், இயக்குநரும் ஆவார். பிறகுஇவரைப் பிரிந்து விட்டார். இந்த நிலையில் பத்திரிக்கையாளரான சந்திரஜோட சக்ரவர்த்தி என்பவரை சமீபத்தில் மறுமணம் புரிந்தார்.
மஞ்சுளாவின் போர்க்குரல்
இந்த நிலையில் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான மஞ்சுளா தனது கணவரின் 2வது திருமணத்தை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்.
விவாகரத்து பெறாமல் எப்படி
இதுகுறித்து மஞ்சுளா கூறுகையில், எனக்கும் சக்ரவர்த்திக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். ஆனால், முறைப்படி விவாகரத்து பெறவில்லை. ஆனால், திடீரென ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.
போராடப் போகிறேன்
எனக்கும், எனது மகளுக்கும் சமூக பாதுகாப்பு அவசியம் என்பதால், கணவருக்கு எதிராக சட்ட போராட் டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
எனக்கா தெரியாது சட்டம்
இது குறித்து சக்ரவர்த்தி கூறுகையில்,நான் பொறுப்புள்ள பத்திரிகையாளன், எனக்கும் சட்டம் தெரியும். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், வேறு பெண்ணை திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என்பது சாமானியருக்கும் தெரியும். மஞ்சுளாவை முறைப்படி விவாகரத்து செய்துள்ளேன். அதற்கான ஆதாரம் உள்ளது.
ஸ்ருதிக்கும் விவரம் தெரியும்
நடிகை ஸ்ருதியும் விவரம் தெரியாதவர் அல்ல. எனக்கு திருமணமாகி பெண் இருப்பதும், விவாகரத்து பெற்றுள்ளதும் அவருக்கு தெரியும். மஞ்சுளாவின் சட்ட போராட்டத்தை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார்.
சக்கரவர்த்தி, மஞ்சுளா, ஸ்ருதி ஆகியோரின் இந்த முக்கோண மோதல் கர்நாடகத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.