Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தமிழ் சினிமாவில் இடைவெளி கொடுத்தது ஏன்.. பிரபல நடிகை பளீச்!
சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளி கொடுத்தது ஏன் என பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'அருவி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தரமான நடிகை என்ற பெயரை பெற்றார்.
231 கி.மீ 4 நாட்களாக நடந்தே வந்த ரசிகர்கள்…. ஆரத்தழுவி நெகிழ்ந்த ராம் சரண் !
அருவி படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் பெற்றார் அதிதி பாலன். ஆனால் அதன் பிறகு அதிதி பாலனை பெரிதாக தமிழ் சினிமாவில் காண முடியவில்லை.
குட்டி ஸ்டோரி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார். நளன் குமாரசாமி இயக்கிய ஆடல் பாடல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி பாலன்.
ஏன் நடிக்கவில்லை?
இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான 'கோல்டு கேஸ்' மலையாள படத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை அதிதி பாலன்.
அதற்கான இடைவெளி
அதாவது அருவி படத்திற்கு பிறகு தான் நடிக்காமல் எடுத்துக் கொண்ட இடைவெளி சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக தான் தேர்ந்தெடுத்த வழி என குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்திக்கொண்டேன்
இந்த இடைவெளியில் திரைத்துறையைப் நன்றாக புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அதிதி பாலன். சினிமாவில் தான் செய்ய விரும்புவதை கண்டுபிடிக்கவும் சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.