Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாக்யலட்சுமி சீரியலில் புது செழியன் என்ட்ரி...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே
சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் இருந்து ஆரியான் விலகியதை அடுத்து புதிய செழியன் என்ட்ரி கொடுப்பதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அவர் என்ட்ரியாகும் முதல் நாளே செமயான காட்சிகள் நடப்பதாக காட்டப்படுகிறது.
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாக்யலட்சுமி ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. பிறகு டல்லடித்த இந்த சீரியல், டிஆர்பி.,யில் ஏற்ற இறக்கங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோபி - ராதிகா திருமணம், கோபி - பாக்யா விவாகரத்து கிடைக்குமா என்பதை வைத்தும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மைனா... அம்மாவே இவ்ளோ ஸ்டைலா இருக்காங்களே!
சீரியலில் இருந்து விலகிய ஆர்யான்
இந்த சீரியலில் கோபி - பாக்யாவின் மூத்த மகன் செழியன் கேரக்டரில் ஆரியான் நடித்து வந்தார். சீரியலில் இவரது இயல்பான நடிப்பிற்கு தனி ஃபேன்ஸ் உண்டு. ஆனால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஆரியான் அறிவித்தார். அதே சமயம் தான் விலகியதற்கு என்ன காரணம் என அவர் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
புது செழியன் என்ட்ரி
இந்நிலையில் ஆர்யானுக்கு பதிலாக செழியன் கேரக்டரில், ராஜபார்வை சீரியலில் நடித்த விகாஸ் சம்பத் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விகாஸ் என்ட்ரியாகும் எபிசோடிற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஓட்டலில் ஜெனியின் அப்பாவை சந்திக்கும் செழியனிடம், ஜெனி பணம் கேட்டதாக சொல்லி மாமனார் பணம் கொடுக்கிறார். குழப்பத்துடன் வீட்டிற்கு வந்து ஜெனியிடம் இது பற்றி சண்டை போடுகிறார். இதை கேட்க வரும் அம்மா பாக்யாவிடமும் கோபத்தை காட்டுகிறார் செழியன்.
ஆரம்பமே இப்படியா
அப்போது அங்கு வரும் எழில், செழியனின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் வரும் கோபி இதை பார்த்து, ஆத்திரத்தில் கத்துகிறார். பணத்தை வைத்து தங்களால் வீட்டில் பிரச்சனை வந்து விட்டதாக பாக்யாவிடம் வேதனைபடுகிறார் கோபியின் அம்மா. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், புதிய செழியன் என்ட்ரியாகும் எபிசோடே அண்ணன்-தம்பி அடிதடி தானா. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே என கூறி வருகின்றனர்.
என்ன இப்படி ஆகிடுச்சு
பாக்யலட்சுமி சீரியலில் இதுவரை செழியன் -எழில் இருவரும் நல்ல நண்பர்களை போன்ற அண்ணன்- தம்பியாக பழகுவதாக ஆரம்பம் முதலே காட்டப்பட்டது. ஆனால் தற்போது சட்டையை பிடித்து சண்டை போடும் நிலைக்கு போய் விட்டார்களே என்று ரசிகர்கள் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!