Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னுடைய தீபிகா படுகோன்...ஷாக் கொடுத்த செல்வராகவன்
சென்னை : தனித்துவமான ஸ்டெயிலால் டைரக்டர் செல்வராகவன் தனக்கென் தனி ரசிகர் கூட்டமே வைத்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் ஆகி, பல விதமான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோரை இயக்கிய செல்வராகவன், சாணிகாகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவரின் நடிப்பும் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை, 2011 ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் செல்வராகவன்.
இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது ஆண் குழந்தைக்கு தாயானார் கீதாஞ்சலி. இவருக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர். தனது மகிழ்ச்சியான தருணங்களை ஃபோட்டோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் செல்வராகவன், சமீபத்தில் தனது 6 மாத மகன் ரிஷிகேஷின் ஃபோட்டோவையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது லேட்டஸ்டாக தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், அந்த ஃபோட்டோவுடன் செல்வராகவன் வெளியிட்டுள்ள கேப்ஷன் பலரையும் கவர்ந்துள்ளது.
கடனில் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. கை கொடுக்கும் சன் பிக்சர்ஸ்.. 5 படங்கள்.. தீயாய் பரவும் தகவல்!
அதில், என்னுடைய தீபிகா படுகோனான கீதாஞ்சலி செல்வராகவனுடன் என குறிப்பிட்டுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்து, லைக்குகளை அள்ளி வருகிறது.