Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்தாலும்.. தனது முதல் கார் ஜெய்ஷங்கரால்தான் கிடைத்தது..நெகிழும் எஸ்ஏசி
சென்னை: நடிகர் ஜெய்ஷங்கரின் உயர்ந்த மனது குறித்து திரையுலகில் அனைவரும் பேசுவார்கள். தான் நடித்தப்படம் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும் நல்ல மனதுகாரர் என்பார்கள்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமான முதல் படமே ஜெய்ஷங்கர் நடித்த மனசாட்சி படம்.
பின்னர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்த சந்திரசேகருக்கு ஜெய்ஷங்கர் முதன் முறையாக கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதை நெகிழ்வுடன் எஸ்.ஏ.சி குறிப்பிட்டுள்ளார்.
மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!

ஜெய்ஷங்கர் படத்தில் உதவி இயக்குநராக எஸ்.ஏ.சி
இன்று எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள். அவர் 1960 களின் இறுதியில் சென்னைக்கு வந்தவர் திரைத்துறையில் ஈடுபட முயற்சி எடுத்துவந்தார். ஆரம்பத்தில் ஜெய்ஷங்கர் நடித்த மனசாட்சி படத்தில் உதவி இயக்குநராக கிளாப் அடிப்பவராக வாழ்க்கையை தொடங்கினார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் உதவி இயக்குநர், அசோசியேட் இயக்குநராக பணியாற்றி அனுபவப்பட்டு இயக்குனராக உயர்ந்தார்.

சட்டம் ஒரு இருட்டறை..
எஸ்.ஏ.சி 1978 ஆம் ஆண்டு சினிமா உலகத்திற்கு வந்து 10 ஆண்டுகள் கழித்து 2 படங்களை இயக்கினார் அதில் ஒருபடம் சரியாக போகவில்லை. அடுத்து விஜயகாந்தை வைத்து சட்டம் ஒரு இருட்டறை படம் சிறப்பாக ஓடி எஸ்.ஏ.சிக்கு பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. விஜய்காந்துக்கும் இது வெற்றிப்படமாக அமைந்தது. எஸ்.ஏ.சிக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்தது. தனது வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி எஸ்.ஏ.சி தனது யூடியூப் சானலான யார் அந்த எஸ்.ஏ.சியில் குறிப்பிட்டுள்ள நெகிழ்வான பதிவு வருமாறு.

மனைவி குழந்தைகளுடன் மோட்டார் பைக்கில்
எஸ்.ஏ.சி இயக்குநராக உயர்ந்தாலும் கார் வாங்கவில்லை. வெளியில் செல்ல இருசக்கர வாகனம் மட்டுமே வைத்திருந்தார். அந்த வாகனத்தில் மனைவி ஷோபா, மகன் விஜய் மற்றும் கைக்குழந்தையான மகளுடன் செல்லும்போது எதிரில் காரில் வந்த நடிகர் ஜெய்ஷங்கர் இதைப்பார்த்துவிட்டார். எஸ்.ஏ.சியை அழைத்த அவர் "என்ன சேகர் இயக்குநராக ஆகி படமெல்லாம் இயக்குகிறீர்கள் இன்னும் கார் வாங்கலையா, இப்படி இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் போவது சேப்டி இல்லையே" எனக்கேட்டுள்ளார்.

ஜெய்ஷங்கர் கொடுத்த புத்தம் புதிய ஃபியட் கார்
அதற்கு எஸ்.ஏ.சி இல்லண்ண அதுக்கு இன்னும் நேரம் வரலைன்னு சொல்லியிருக்கார். அதற்கு ஜெய்ஷங்கர் நோ, நோ நாளைக்கு என்னை வீட்டில் வந்து பாருங்கன்னு சொல்லியிருக்கிறார். மறுநாள் ஜெய்ஷங்கர் வீட்டுக்கு போயிருக்கார் எஸ்.ஏ.சி, ஜெய்ஷங்கர் வீட்டு வாசலில் புத்தம் புது சிவப்பு நிற ஃபியட் பத்மினி கார் நின்றிருந்துள்ளது. எஸ்.ஏசியை பார்த்த ஜெய்ஷங்கர் அவரிடம் கார் சாவியை கொடுத்து எடுத்துட்டுப்போங்கன்னு அனுப்பி வைத்திருக்கிறார்.
-
“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி
-
சூர்யா 42 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா.. ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்!
-
லோகேஷ் யுனிவர்ஸ் மாதிரி இப்ப கெளதம் யுனிவர்ஸ்: இங்கேயும் கமல் தான் வேட்டையாடி விளையாடப் போறாராம்!